திருக்குறள்

1089.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் கணியெவனோ ஏதில தந்து.

திருக்குறள் 1089

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட் கணியெவனோ ஏதில தந்து.

பொருள்:

பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.

மு.வரததாசனார் உரை:

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.

சாலமன் பாப்பையா உரை:

பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?.